பிலாஸ்பூர்: ஹரியாணாவைத் தொடர்ந்து, வரவிருக்கும் தேர்தலிலும் பாஜக வெற்றிபெறும் என பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உறுதிப்படத் தெரிவித்தார்.
ஸ்ரீ நைனா தேவி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நட்டா, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் செயல்பாடுகளால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெறும்.
ஹரியாணா, ஜம்மு-காஷ்மீரில் பாஜக நிறைய சாதித்துள்ளதாகவும், இதற்கான பெருமை அனைத்தும் மக்களையே சேரும். தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து நைனா கோயிலில் வழிபாடு மேற்கொண்டார்.
ஹரியாணாவில் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும், சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் மறுபிரவேச முயற்சியைத் தடுத்து நிறுத்தவும் ஆளும் பாஜக ஹரியாணாவில் ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 இடங்களில் 29 இடங்களைக் கைப்பற்றி பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. யூனியன் பிரதேசத்தில் தேசிய மாநாடு-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.