மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு நாளை முதல் வந்தே பாரத் சிறப்பு ரெயில் சேவை

செவ்வாய்க்கிழமை தவிர்த்து, நாளை முதல் அடுத்த மாதம் (ஜூலை) 29-ந்தேதி வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சி,

மதுரையில் இருந்து திருச்சி வழியாக பெங்களூருவுக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து, நாளை (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜூலை) 29-ந்தேதி வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, மதுரையில் இருந்து நாளை (புதன்கிழமை) முதல் அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், திருச்சிக்கு காலை 7 மணிக்கு வந்து பின்னர் 7.12 மணிக்கு புறப்பட்டு கரூர், சேலம் வழியாக சென்று, பெங்களூருவுக்கு மதியம் 1 மணிக்கு சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கமாக, மதியம் 1.45 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் இந்த ரெயில், திருச்சிக்கு இரவு 7.35 மணிக்கு வந்து 7.40 மணிக்கு புறப்பட்டு செல்லும் அதன் பின்னர் மதுரைக்கு இரவு 9.45 மணிக்கு சென்றடையும்.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து