மதுரை – செங்கோட்டை ரயில் நேரம் 4 நாள்களுக்கு மாற்றம்!

மதுரை: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் காரணமாக மதுரை – செங்கோட்டை பயணிகள் விரைவு ரயிலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வங்கிப் பணியாளா் போட்டித் தோ்வுக்கு விண்ணப்பிக்க காலம் அவகாசம் நீட்டிப்பு!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இதையொட்டி, ஆக. 26, 27 மற்றும் செப். 8, 9 ஆகிய தேதிகளில் ராஜபாளையம்- சங்கரன்கோவில் இடையேயான ரயில் போக்குவரத்து காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.20 மணி வரை தடை செய்யப்படுகிறது.

இதனால், மேற்கண்ட 4 நாள்களிலும் செங்கோட்டை- மதுரை பயணிகள் விரைவு ரயில் (06664) செங்கோட்டையிலிருந்து பிற்பகல் 12.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 50 நிமிடம் தாமதமாக 1 மணிக்குப் புறப்படும்.

ராஜபாளையத்தில் இருந்து பிற்பகல் 2.10 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு மதுரை சென்று சேரும்.

இதன்படி பயணிகள் தங்களது பயணத்திட்டத்தை அமைத்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!