மதுரை – சென்னை எழும்பூர் விரைவு ரெயில் ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவை ரத்துசெய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

மதுரை,

பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை – சென்னை எழும்பூர் அதிவிரைவு ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதாவது,

தெற்கு ரெயில்வே மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மதுரை – சென்னை எழும்பூர் அதிவிரைவு ரெயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, இன்று (செப்.5) இரவு 8.50 மணிக்கு மதுரையில் இருந்து சென்னை புறப்படும் ரெயிலும் (வண்டி எண்:22624), அதேபோல், நாளை செப்.6 அன்று இரவு 10.05 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு புறப்படும் ரெயிலும் (வண்டி எண். 22623) ரத்து செய்யப்படுகிறது."

இவ்வாறு தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி