மதுரை பெண்கள் விடுதியில் தீ! இரு மாணவிகள் பலி!

மதுரையில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு மாணவிகள் உயிரிழந்தனர்.

மேலும், மூன்று பெண்கள் பலத்த தீ காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

2 உயிரிழப்பு; 3 படுகாயம்

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் பகுதியில் பெண்கள் தங்கும் விடுதியில் வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில், பரிமளா மற்றும் சரண்யா என்ற இரண்டு மாணவிகள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மூன்று பெண்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகை மூட்டத்தால், விடுதிகளில் தங்கியிருந்த பல பெண்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பொங்கல் விடுமுறை: ரயில் முன்பதிவு தொடங்கியது!

வருவாய் கோட்டாட்சியர் விசாரணை

தீ விபத்து ஏற்பட்ட பெண்கள் விடுதிக்கு சென்ற மதுரை வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி, ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

முதல்கட்ட விசாரணையில், விடுதியில் இருந்த குளிர்சாதனப் பெட்டி வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

திருப்பதி லட்டு விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்