“மதுவை தமிழகம் மட்டும் ஒழிக்க இயலாது; ஆளுநர் எதிர்பார்ப்பு எதுவும் நிகழாது” – அமைச்சர் எஸ்.ரகுபதி

சென்னை: “தமிழகத்தில் ஆளுநர் எதிர்பார்க்கும் எந்த நிகழ்வும் நடைபெறாது. இங்கு மட்டும் மதுவை ஒழியுங்கள் என்றால் முடியாது. கள்ளச்சாராயம் பெருகிவிடும். இந்தியா முழுவதும் ஒழிக்கப்பட வேண்டும்” என்று சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியது: “ஆளுநர் ஆன்லைன் ரம்மியின் தூதுவராக, நீட் தேர்வுகளுக்கான பிஆர்ஓ போல செயல்பட்டு வருகிறார். காந்தி மண்டப வளாகத்தில் மதுபாட்டில்கள் கண்டறியப்பட்டுள்ளது மிகுந்த வருத்தமளிப்பதாக கூறியுள்ளார். ஆளுநருடன் கேமராமேன் சென்றுள்ளார். அப்போது பாட்டில் இருந்துள்ளது. சென்னை மாநகரில் இரவு நேரங்களில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. காந்தி மண்டபம், காமராஜர் நினைவிடங்களில் பகல் நேரங்களில் தொழிலாளர்கள் சுத்தம் செய்கின்றனர். சுத்தத்துக்கு நாங்கள் முக்கியத்துவம் தருகிறோம்.

Related posts

நவி மும்பையில் ரூ.25 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

தேசிய கொடி போர்த்தி பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட தொழில் அதிபர் ரத்தன் டாடா உடல்

இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மைக்கான வாய்ப்பை கிழக்காசிய உச்சி மாநாடு தரும்: பிரதமர் மோடி