மது ஒழிப்பு மாநாடு: அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு!

விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

மக்கள் பிரச்னைக்காக சாதிய சக்திகள் தவிர மற்ற எந்த சக்திகளோடு இணைவோம். விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம். மற்றக்கட்சியினரும் இணையலாம்.

மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதை தேர்தலுடன் இணைக்க வேண்டாம். திமுக தேர்தல் அறிக்கையிலேயே மதுவிலக்கு இடம்பெற்றுள்ளது. அதனை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

பள்ளியை பூட்டிய தலைமை ஆசிரியர்! வெய்யிலில் மாணவர்கள் அவதி!

விசிக மகளிரணி சார்பில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு அக். 2-ல் நடைபெறவுள்ளது. மதுக்கடைகளை மூடுவதற்கான காலக்கெடுவை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

தேர்தல் நிலைப்பாடு என்பது வேறு, அதை இதோடு பொருத்த வேண்டாம் என்று திருமாவளவன் தெரிவித்தார்.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!