மத்திய பிரதேசத்தில் விரைவு ரெயில் தடம் புரண்டது

ஜபல்பூர்,

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து ஜபல்பூர் செல்லும் இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இன்று காலை 5.50 மணியளவில் இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரெயிலானது ஜபல்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள 6-வது நடைமேடையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது நடைமேடையில் இருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் ரெயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது.

ரெயில் மெதுவாக வந்ததால் நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விரைவு ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

#WATCH | Two coaches of Indore- Jabalpur Overnight Express derailed in Jabalpur, Madhya Pradesh. No casualties/injuries reported.
More details awaited pic.twitter.com/A8y0nqoD0r

— ANI (@ANI) September 7, 2024

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி