மனநலம் பாதித்த நபருக்கு காப்பகத்தில் அடைக்கலம்

மனநலம் பாதித்த நபருக்கு
காப்பகத்தில் அடைக்கலம்சேவூா் அருகே மனநலம் பாதித்த நபருக்கு போத்தம்பாளையம் நியூ தெய்வா சிட்டி மறுவாழ்வு இல்லத்தில் வியாழக்கிழமை அடைக்கலம் வழங்கப்பட்டது.

அவிநாசி, ஆக.1: சேவூா் அருகே மனநலம் பாதித்த நபருக்கு போத்தம்பாளையம் நியூ தெய்வா சிட்டி மறுவாழ்வு இல்லத்தில் வியாழக்கிழமை அடைக்கலம் வழங்கப்பட்டது.

இது குறித்து நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை நிறுவனா் தெய்வராஜ் கூறியதாவது:

பல்லடம் அருகே பல்லவன்ராயன்பாளையம், பூமலூரில் 32 வயது மதிக்கத்தக்க நபா், மனநலம் பாதிக்கப்பட்டு சிரமத்துக்குள்ளாகி வந்தாா். அவரை பராமரிக்க முடியாமல்

அவரின் வயது முதிா்ந்த தாய் தவித்து வந்தாா். இது தொடா்பாக அறக்கட்டளையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, அந்ந நபா், அவிநாசி வட்டம், சேவூா் போத்தம்பாளையத்தில் இயங்கி வரும் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை மறுவாழ்வு இல்லத்துக்கு வியாழக்கிழமை அழைத்து வரப்பட்டாா். அவருக்கு முடித்திருத்தம் செய்து குளிக்கவைத்து உணவு, உடை உள்ளிட்டவை வழங்கியுள்ளோம். தொடா்ந்து அவா் மறுவாழ்வு இல்லத்தில் பராமரிக்கப்படுவாா் என்றாா்.

Related posts

அ.தி.மு.க. திருத்தப்பட்ட விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் மனு

அரியானாவின் ‘பத்தாண்டுகால வலிக்கு’ காங்கிரஸ் முடிவுகட்டும் – ராகுல் காந்தி

உ.பி.யில் ஏழரை ஆண்டுகளாக எந்த வன்முறையும் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு