இயக்குநர் ஷங்கர் வேள்பாரி நாவல் குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் ஷங்கரின் இந்தியன் – 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூலில் தோல்வியடைந்தது. இதனால், ஒட்டுமொத்த படக்குழுவினரும் அதிருப்தியடைந்தனர்.
அடுத்ததாக, கேம் சேஞ்சர் மற்றும் இந்தியன் – 3 படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தாண்டிற்குள் இவ்விரு படங்களும் முழுமையடையும் எனத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் ஷங்கர் எழுத்தாளரும் எம்.பி.யுமான சு. வெங்கடேசன் எழுதிய, ’வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலைத் திரைப்படமாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான, முதல்கட்ட எழுத்து பணிகளும் துவங்கியுள்ளதாகத் தெரிகிறது.
லியோ வசூலை முறியடிக்காத கோட்!
இந்த நிலையில், தன் எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை ஷங்கர் வெளியிட்டுள்ளார்.
அதில்,”அனைவரின் கவனத்திற்கு… பலரும் சு. வெங்கடேசனின் நாவலான ’வீரயுக நாயகன் வேள்பாரி’யின் முக்கியமான காட்சிகளை, பகுதிகளை தங்கள் படங்களில் இணைக்கின்றனர். சமீபத்தில் வெளியான ஒரு டிரைலரில் மிக முக்கியமான பகுதியைப் பார்த்தேன்.
நாவலின் காப்புரிமையைப் பெற்றவனாக உண்மையிலேயே வேதனையாக இருக்கிறது. திரைப்படங்கள், இணையத் தொடர்களில் வேள்பாரி நாவலை பயன்படுத்தாதீர்கள். படைப்பாளிகளின் உரிமையை மதியுங்கள். மீறி நாவலிலிருந்து காட்சிகளை எடுத்தால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவும்” என கடுமையாக எச்சரித்துள்ளார்.
மேலும், ஷங்கர் குறிப்பிட்ட அந்த சமீப டிரைலர், தேவரா படமா அல்லது சூர்யாவின் கங்குவாவா அல்லது ரஜினியின் வேட்டையனா எது என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
தேவரா வெளியீட்டு டிரைலர்!