மருத்துவமனையில் இருந்து சவுக்கு சங்கர் டிஸ்சார்ஜ்

சென்னை ,

சவுக்கு சங்கர் கடந்த 12ம் தேதி மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார் .அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .

இந்த நிலையில், நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சவுக்கு சங்கர் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பினார் . இதனை தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சவுக்கு சங்கர் கூறியிருப்பதாவது .

இருதய பிரச்சனைகளுக்கான சிகிச்சைக்குப் பிறகு, நான் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இப்போது நலமாக இருக்கிறேன். எனது மருத்துவர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி. என தெரிவித்துள்ளார்

Related posts

இங்கிலாந்து: வீடு வெடித்து சிதறியதில் 7 வயது சிறுவன் பலி; 6 பேர் காயம்

தி.மு.க. அரசும், கவர்னரும் புது காதலர்கள் போல இணக்கமாகிவிட்டனர் – செல்லூர் ராஜூ விமர்சனம்

சென்னையில் ரெட் அலர்ட் வாபஸ்: பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என ஆட்சியர் அறிவிப்பு