மருத்துவ படிப்பு: அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று நடக்கிறது

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.

சென்னை,

தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை, தரவரிசை பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியிடப்பட்டது. இதற்கிடையில், அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நேற்று தொடங்கியது.

இந்த நிலையில், மருத்துவப்படிப்பு சிறப்பு பிரிவு (மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள்) கலந்தாய்வு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. முதலாவதாக, சிறப்பு பிரிவு கலந்தாய்வு காலை 8 மணிக்கு தொடங்கி 9 மணி வரையில் நடைபெறுகிறது.

அதன்பிறகு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில், தரவரிசை பட்டியலில் முதல் 1,007 இடங்களை பிடித்த மாணவர்கள் பங்கேற்கிறார்கள். தொடர்ந்து மதியம் 2 மணி முதல் பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), எஸ்.சி., எஸ்.டி.சி., எஸ்.டி. பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!