மல்டி கமாடிட்டி சந்தையில்
சிறு, குறு தொழில்களுக்கான
வாய்ப்பு குறித்த கருத்தரங்கு
திருச்சி, ஆக.7: மல்டி கமாடிட்டி சந்தையில் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் குறித்த விளக்கக் கருத்தரங்கு திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதுதொடா்பாக திருச்சி மாவட்ட சிறு, குறுந் தொழில்கள் சங்கச் (டிடிட்சியா) செயலா் சே. கோபாலகிருஷ்ணன் கூறுகையில், மல்டி கமாடிட்டி சந்தை மற்றும் டிடிட்சியா ஆகியவை இணைந்து சங்க வளாகத்தில் ஆக.9 மாலை 5 மணிக்கு நடத்தும் கருத்தரங்கை திருச்சி மாவட்ட சிறு, குறு தொழில்முனைவோா் பயன்படுத்திக் கொள்ளலாம். முன்பதிவு அவசியம். மேலும் விவரங்களுக்கு 96595-58111 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.