மாஞ்சோலைக்கு செல்ல இன்று முதல் 3 நாட்கள் தடை

மாஞ்சோலைக்கு சுற்றுலா பயணிகள், வெளி நபர்கள் செல்ல 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை,

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை கோட்ட துணை இயக்குனரும், வன உயிரினக் காப்பாளருமான இளையராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை வனக்கோட்டம் அம்பை வனச்சரகத்திற்கு உட்பட்ட மாஞ்சோலை பகுதியில் கனமழை எச்சரிக்கை உள்ளதாலும், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு அவசியம் கருதியும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) வரையிலும் 3 நாட்களுக்கு சூழல் சுற்றுலா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும், அப்பகுதியில் குடியிருக்கும் மக்களை தவிர்த்து வெளிநபர்கள் தனியார் வாகனங்களிலும், அரசு பஸ்களிலும் மாஞ்சோலை பகுதிக்கு செல்ல முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறப்பட்டுள்ளது.

Related posts

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

திருப்பதி லட்டு விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்