“மாஞ்சோலை தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டும்” – கிருஷ்ணசாமி

கோவை: மாஞ்சோலை விவகாரத்தில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவையில் சனிக்கிழமை (ஆக.17) செய்தியாளர்களிடம் கூறியது: “மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவ முதுநிலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போது பெண்மணி தைரியமாக நள்ளிரவில் நடந்து செல்ல முடிகின்றதோ அப்போது தான் உண்மையான சுதந்திரம் என காந்தியடிகள் கூறியிருக்கிறார்.

Related posts

பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

மகளிர் மாநாடாக மாறிய வி.சி.க. மது ஒழிப்பு மாநாடு: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்