மாடியில் இருந்து குதித்து இளைஞா் தற்கொலை

மாடியில் இருந்து குதித்து
இளைஞா் தற்கொலைமதுரை செல்லூா் பகுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

மதுரை செல்லூா் பகுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.

மதுரை செல்லூா் மீனாம்பாள்புரம் சத்தியமூா்த்தி தெருவைச் சோ்ந்த ராஜூ மகன் நவநீதகிருஷ்ணன் (30). திருமணமாகாதவா். தனது தந்தை ராஜூ நடத்தி வரும் மளிகைக் கடையை கவனித்து வந்தாா். இந்த நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததால் தனியாா் மருத்துவமனையில் அவா் சிகிச்சைப் பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை மாலை கடையில் இருந்த நவநீத கிருஷ்ணன் மாடிக்குச் செல்வதாகக்கூறிச் சென்றாா். சிறிது நேரத்தில் அங்கிருந்து 3-ஆவது மாடியில் இருந்து குதித்ததில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினா் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகக் கூறினா்.

இதுகுறித்து செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related posts

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு; மத்திய அரசு அறிவிப்பு

ராஜஸ்தான்: சம்பளம் சரிவர கிடைக்காத ஐகோர்ட்டு ஊழியர் தற்கொலை; மனைவிக்கு வேலை, ரூ.10 லட்சம் இழப்பீடு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை; பாதுகாப்பு படையினர் 4 பேர் காயம்