மின் கட்டணம் தொடர்பாக போலி குறுஞ்செய்தி: மின்வாரியம் எச்சரிக்கை

சென்னை,

தமிழகத்தில் மின் கட்டணத்தை மின் வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளம் வாயிலாகவும், ஆன்லைன் செயலி வாயிலாகவும் செலுத்துவார் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. சில மோசடி கும்பல்கள் இதை சாதகமாக பயன்படுத்தி சைபர் குற்றச்செயலில் ஈடுபட முயற்சித்து வருகின்றன.

சமீபத்தில் மின் நுகர்வோர்களுக்கு, 'உங்கள் பழைய மாத மின் கட்டணம் சரி செய்யப்படாததால் இன்றிரவு உங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும். இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செயலியை பயன்படுத்துங்கள்' என போலியான குறுஞ்செய்தி பரவுகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் தன்னுடைய அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

நுகர்வோர்கள் ஜாக்கிரதை. தூண்டிலில் சிக்க வேண்டாம். இது மின்கட்டண மோசடியின் புது அவதாரம். உங்கள் பழைய மாத மின் கட்டணம் சரி செய்யப்படாததால், இன்றிரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும். இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செயலியை செயல்படுத்தி குறைந்த பட்ச ரூ.03 அல்லது தகவல்களை தரவும் என குறுஞ்செய்தி வந்தால், அதை பொருட்படுத்தாதீர். பதற்றப்படாமல், முதலில் உங்கள் மின் கட்டண நிலையை, மின்வாரிய அதிகாரப்பூர்வ இணையதளம் https://tnebltd.gov.inமற்றும் செயலியில் சரிபார்க்கவும். எஸ்.எம்.எஸ். வாயிலாக வந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். எஸ்.எம்.எஸ் வந்த எண்ணை அழைக்க வேண்டும். இதுதொடர்பாக, சைபர் குற்ற எண் 1930-ல் புகார் அளிக்கவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஹலோ கிட்டி… பிரியங்கா கோல்கடே!

இதழில் குறுநகை… யாஷிகா ஆனந்த்!

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் – புகைப்படங்கள்