மியான்மரில் வீட்டுச் சிறையில் இருந்த ஆங் சான் சூகியின் கூட்டாளி மரணம்

கடந்த 29-ந்தேதி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட டின் ஓ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நேபிடோவ்,

மியான்மரில் தேசிய ஜனநாயக கட்சியின் இணை நிறுவனர் டின் ஓ (வயது 97). கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்றது. இந்த தேர்தல் வெற்றிக்கு ஆங் சான் சூகியின் நெருங்கிய கூட்டாளியான இவர் முக்கிய பங்கு வகித்தார். ஆனால் தேர்தலில் மோசடி நடைபெற்றதாக கூறி 2021-ல் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

ஆனால் டின் ஓவின் உடல்நலம் சரியில்லாததால் அவர் தொடர்ந்து வீட்டுச்சிறையிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

ஜெனின் அகதிகள் முகாம் பகுதில் இருந்து வெளியேறியது இஸ்ரேல் படை

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: புதின் அறிவிப்பு

பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து: 17 மாணவர்கள் உடல் கருகி பலி