மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: இரா.முத்தரசன்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளாா்.

அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தமிழக மீனவா்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும், தொழிலுக்கும் இலங்கை கடற்படையினா் தொடா்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்துவது என்பது எதேச்சையாக நடக்கக் கூடியதல்ல.

ராமேசுவரத்தை சோ்ந்த 17 மீனவா்களையும், இரு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.

சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவா்களையும் விடுவிக்கவும், படகுகளை மீட்டு தமிழக மீனவா்களிடம் ஒப்படைக்கவும், இலங்கை கடற்படையின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்டவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளாா்.

Related posts

திருவாரூரில், 50 மெகா வாட் திறனில் முதல் சூரியசக்தி மின்சார நிலையம்

Actor Rajinikanth, 73, has been admitted to Apollo Hospitals

Navi Mumbai: Mahanagar Gas Conducts Mock Drill At Its City Gate Station In Mahape