முதலீடுகளின் மையமாக தமிழ்நாடு திகழ்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மழைபோல் பொழியும் முதலீடுகள் மாநிலத்தின் உந்துசக்தியாக உள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

திராவிட மாடல் அரசின் கீழ் முதலீடுகளின் மையமாக தமிழ்நாடு திகழ்கிறது. மழைபோல் பொழியும் முதலீடுகள் மாநிலத்தின் உந்துசக்தியாக உள்ளது.

ரூ.17,616 கோடி முதலீடுகளுக்கான 19 தொழில் நிறுவனங்களின் திட்டங்களை தொடங்கி வைத்தேன். ரூ.51,157 கோடி மதிப்புள்ள 28 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினேன்.

இதன் மூலம் 1,06,803 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. இது நமது இளைஞர்களுக்கு மகத்தான வாய்ப்புகளை வழங்குவதுடன் மாநிலம் முழுவதும் சமமான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A day of raining investments, powering our state's growth! Tamil Nadu stands tall as the hub for global investments under our #DravidianModel!
At the #TamilNaduInvestmentConclave2024, I inaugurated 19 projects with investments of ₹17,616 crore and laid the foundation stone for… pic.twitter.com/Pza3aVi53o

— M.K.Stalin (@mkstalin) August 21, 2024

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்