முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியை திங்கள்கிழமை ஏற்றுக் கொண்டனர்.

பெரியாரின் பிறந்த நாளான செப். 17, சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு அறிவித்தார்.

அன்றைய நாள், அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தங்கம் விலை மீண்டும் ரூ.55,000-ஐ கடந்தது!

இந்த நிலையில், நாளை பெரியாரின் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், சமூக நீதி நாள் உறுதிமொழி இன்று ஏற்கப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழியை வாசித்தார்.

இந்த நிகழ்வில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்