மும்பையில் ஆகஸ்ட் மாதத்தில் சொத்து பதிவு 7% அதிகரிப்பு: நைட் பிராங்க்

மும்பை: வணிகத் தலைநகரான மும்பையில் சொத்துக்களின் பதிவு ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவிகிதம் அதிகரித்து சுமார் 11,650 யூனிட்களாக உள்ளது என்று நைட் பிராங்க் இந்தியா தெரிவித்துள்ளது.

அரசு தரவுகளை மேற்கோள் காட்டி, ரியல் எஸ்டேட் ஆலோசகரான நைட் ஃபிராங்க் இந்தியா, மும்பை மாநகரத்தில் (பிஎம்சி அதிகார வரம்பின் கீழ் உள்ள பகுதி) ஆகஸ்ட் மாதம் இதுவரை 11,631 சொத்து பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மும்பையின் குடியிருப்பு சந்தை தொடர்ந்து வலுவாக உள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், ரூ. 1 கோடி மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களின் பதிவுகளின் பங்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ஒட்டுமொத்தமாக, ஆகஸ்ட் 31ஆம் தேதி இரவு 8.15 மணி வரை உள்ள தரவுகள் படி இந்த எண்ணிக்கை 11,650 யூனிட்களாக பதிவாகியுள்ளது. அதே வேளையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 10,902 சொத்துக்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது. இந்த சொத்துக்கள் பதிவு மூலம் அரசு சுமார் ரூ.1,050 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

வலுவான பொருளாதாரக் கண்ணோட்டம் மற்றும் நிலையான வட்டி விகிதங்கள் வீடு வாங்குபவர்களின் உணர்வுகளை நேர்மறையாக வைத்து உள்ளது என்று நைட் பிராங்க் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஷிஷிர் பைஜால் தெரிவித்துள்ளார்.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!