மும்பை: ரீல்ஸ் எடுக்கச்சென்ற பெண் பள்ளத்தாக்கில் விழுந்து பலி!

மும்பை: ரீல்ஸ் எடுக்கச்சென்ற பெண் பள்ளத்தாக்கில் விழுந்து பலி!மும்பையில் ரீல்ஸ் எடுக்கச்சென்ற பெண் பள்ளத்தாக்கில் விழுந்து பலியானார்.ஆன்வி கம்தார்படம் | ஆன்வி கம்தார் இன்ஸ்டாகிராம்

மும்பையில் ரீல்ஸ் எடுக்கச்சென்ற பெண் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்து பலியானார்.

பயணங்களில் ஈடுபாடு கொண்டவரான 27 வயதான ஆன்வி கம்தார் மும்பையில் உள்ள பள்ளத்தாக்கின் நுனியில் நின்று விடியோ எடுத்தபோது கால் தவறி 300 அடி பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக பலியானார்.

மும்பையின் முலுண்ட் பகுதியில் வசித்து வந்த ஆன்வி கம்தார் குளோகல் ஜர்னல் என்ற பெயரில் 2,74,000 க்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை கொண்டுள்ளார். பட்டய கணக்காளரான அவர் டிலாய்ட் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ( ஜூலை 16) மகாராஷ்டிரத்தின் ராய்காட் மாவட்டத்தில் இருக்கும் மங்கானில் புகழ்பெற்ற கும்பே நீர்வீழ்ச்சியை விடியோ எடுப்பதற்காக தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.

இயற்கை எழில் கொஞ்சும் சூழலை தனது போனில் பதிவு செய்யும் போது பள்ளத்தாக்கில் நுனியில் இருந்து கீழேத் தவறி விழுந்துள்ளார். அவரது நண்பர்கள் தகவல் கொடுத்ததையடுத்து, போலீஸார் மற்றும் உள்ளூர் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, ஆன்வியை மீட்டு அருகில் உள்ள மாங்கன் தாலுகா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Related posts

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி; சித்தராமையா பதவி விலகலா…? டி.கே. சிவக்குமார் பதில்

6 வயது சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்த தலைமை ஆசிரியர் கைது

திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் ? தேவஸ்தானம் மறுப்பு