மூன்றரை மணி நேரத்திற்கு பிறகு பணிக்கு திரும்பிய தூய்மைப் பணியாளர்கள்!

மூன்றரை மணி நேரத்திற்கு பிறகு பணிக்கு திரும்பிய தூய்மைப் பணியாளர்கள்!பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், மூன்றரை மணி நேரத்திற்கு பிறகு பணிக்கு திரும்பினர்.கோப்புப்படம்

நீடாமங்கலம்: பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், மூன்றரை மணி நேரத்திற்கு பிறகு பணிக்கு திரும்பினர்.

நீடாமங்கலம் பேரூராட்சியில் வரிவசூல் பணி முடிந்த பின்பு சம்மந்தப்பட்ட தூய்மைப் பணியாளர், தூய்மைப் பணிக்கு வரவேண்டும் எனக்கோரி மற்ற தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் புதன்கிழமை அதிகாலை பேரூராட்சி அலுவலகம் வந்த போதும் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து பேரூராட்சி அதிகாரிகள் சமாதனம் செய்ய முயன்றபோதும் தூய்மைப் பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து தங்கள் தெருவுக்குச் சென்று வீடுகளின் முன்பு அமர்ந்து கொண்டனர். இதனால் நீடாமங்கலம் பேரூராட்சியில் சாலைகளில் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தது

இந்த நிலையில், பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுடன் பேரூராட்சி தலைவர் ஆர்.ஆர்.ராம்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதன் பிறகு தூய்மைப் பணியாளர்கள் மூன்றரை மணி நேரம் கழித்து காலை 10.30 மணிக்குப்பிறகு பணிக்கு திரும்பினர்.

Related posts

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி; சித்தராமையா பதவி விலகலா…? டி.கே. சிவக்குமார் பதில்

6 வயது சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்த தலைமை ஆசிரியர் கைது

திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் ? தேவஸ்தானம் மறுப்பு