மெய்யழகன் கார்த்தியின் சிறந்த படமாக இருக்கும்: பிரேம் குமார்!

மெய்யழகன் திரைப்படம் கார்த்தியின் சிறந்த படமாக இருக்கும் என இயக்குநர் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை இயக்கியுள்ளார்.

இந்தத் திரைப்படம் கார்த்தியின் 27-வது படமாகும். இப்படத்துக்கு 'மெய்யழகன்' எனப் பெயரிட்டுள்ளனர். இதன், டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. செப். 27 படம் திரைக்கு வருகிறது.

மையக் கதாபாத்திரங்களில் கார்த்தியும், அரவிந்த் சுவாமியும் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய இயக்குநர் பிரேம் குமார், “மெய்யழகன் முழுக்க முழுக்க நடிப்பை மட்டுமே நம்பி உருவான திரைப்படம். நடிகர் கார்த்தி நன்றாக நடித்திருக்கிறார். இப்படம் அவரின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

நல்லவனாக இருந்தால் பிழைக்க முடியாது: ரஜினி

தற்போது, படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து