மெய்யழகன் திரைப்படத்தின் திரைகள் அதிகரித்துள்ளன.
இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, அர்விந்த் சுவாமி நடிப்பில் உருவான திரைப்படம் மெய்யழகன். கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
ஆனால், வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு வரும் அர்விந்த் சுவாமிக்கும் உள்ளூரிலிருக்கும் கார்த்திக்கும் இடையேயான உறவைப் பழைய நினைவுகளுடன் பேசும் படமாக இது உருவாகியிருந்தாதால் படத்தில் இடம்பெற்ற பல காட்சிகளையும் ரசிகர்கள் ரசித்து குறிப்பிட்டு வருகின்றனர்.
இதனால், வெளியானபோது ஒதுக்கப்பட்ட திரைகளைவிட தற்போது கூடுதல் திரைகளில் மெய்யழகன் திரையிடப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆச்சரியப்படுத்தும் வசூல்… பிளாக்பஸ்டரான கிஷ்கிந்தா காண்டம்!