மேகதாது அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி – கர்நாடகா அரசு விண்ணப்பம்

மேகதாது அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி – மத்திய அரசிடம் கர்நாடக அரசு விண்ணப்பம்!

மேகதாது அணை

மேகதாதுவில் அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி அளிக்குமாறு மத்திய அரசிடம் கர்நாடக அரசு வலியுறுத்தியுள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கர்நாடக அரசு அதற்கான முயற்சிகளை அடுத்தடுத்து மேற்கொண்டு வருகிறது.
அணை கட்டுமானத்தின் சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மேற்கொள்வது குறித்து மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம், கடந்த மே மாதம் 30-ஆம் தேதி கர்நாடக அரசு விண்ணப்பித்திருந்தது.

இந்த விண்ணப்பம் மீதான கூடுதல் தகவல்களை மத்திய அரசு கேட்டிருந்த நிலையில், அதற்குப் பதில் அளித்து கடந்த ஜூலை 9-ஆம் தேதி கர்நாடக நீர்வளத்துறை கடிதம் எழுதியிருந்தது. அதில், மேகதாது அணை கட்ட உச்சநீதிமன்றம் இதுவரை எந்தத் தடையும் விதிக்கவில்லை எனவும், சுற்றுச்சூழல் தாக்க ஆய்வறிக்கை தயாரிப்பதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்க தடையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. இதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், நிபுணர் குழுவின் பரிசீலனைக்கு விண்ணப்பத்தை விரைவில் பட்டியலிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

விளம்பரம்

இதனிடையே, மேகதாது அணைக்கு கர்நாடக அரசு சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ள நிலையில் தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி அதை வழங்கக்கூடாது என பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்திடம் கர்நாடகா மீண்டும் விண்ணப்பித்துள்ளது.

இந்நிலையில் இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள அன்புமணி, அணைக்கான அனுமதிக்கு தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என கர்நாடகா மனுவில் குறிப்பிட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

விளம்பரம்

மேகதாது அணை கட்டப்பட்டால் பாதிக்கப்படும் மாநிலம் தமிழ்நாடுதான் எனும்போது அதன் ஒப்புதல் இல்லாமல் அனுமதி கோர கர்நாடகாவுக்கு உரிமை கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன், மேகதாது அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரும் கர்நாடகத்தின் மனுவை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: நடுரோட்டில் திடீர் பணமழை… லைக்ஸ் அள்ள யூடியூபர்கள் செய்த வித்தியாசமான வீடியோ!

மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
mekedatu dam
,
Tamilnadu

Related posts

Mumbai: Carpenter Booked For Not Returning ₹22 Lakh Mistakenly Transferred By NRI

Indian Railways Set To Operate Over 6,000 Special Trains For Upcoming Festive Season, From October 1 to November 30; Check Details Inside

Mumbai Shocker: Running Coaching Centre, 3 Brothers For Sexually Assaulting On Teen Student