மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்: தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 6,416 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 8,268 கனஅடியாக அதிகரித்தது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 92.84 அடியாகவும், நீர் இருப்பு 55.95 டிஎம்சியாகவும் இருந்தது.

Related posts

தமிழகத்தில் மகப்பேறு, குழந்தை இறப்பை பூஜ்ஜியத்துக்கு கொண்டுவர 4 புதிய திட்டங்கள்

தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் தேர்வு: 7 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட தமிழ்வழி ஒதுக்கீடு தேர்வு பட்டியல்

விமானப்படை தினத்தை முன்னிட்டு சென்னையில் இன்று பிரம்மாண்ட வான் சாகச நிகழ்ச்சி