மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 6,445 கன அடியிலிருந்து வினாடிக்கு 17,596 கன அடியாக அதிகரித்துள்ளது.

டெல்டா பாசன பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கனஅடியிலிருந்து வினாடிக்கு 7,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… நடுவானில் தில்லி திரும்பியது!

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.26 அடியிலிருந்து 89.92 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 52.55 டிஎம்சியக உள்ளது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது