மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,505 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 20,505 கன அடியாக அதிகரித்துள்ளது.

சேலம்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன்படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று வினாடிக்கு 6,548 கன அடியில் இருந்து 20,505 கன அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.24 அடியில் இருந்து 119.65 அடியாக அதிகரித்துள்ளது. அணையில் தற்போது 92.91 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது. பாசன தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 12,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்