மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 19,199 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக இன்று(செப். 1) காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,396 கன அடியிலிருந்து வினாடிக்கு 19,199 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 13,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

ரத்தமும் தக்காளிச் சட்னியும் அதிகார பீடங்களும்!

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.56அடியிலிருந்து 115.82அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 86.95 டிஎம்சியாகவும் இருந்தது.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!