மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு

அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.

சேலம்,

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 1-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர்இருப்பை பொறுத்து முன்னதாகவோ அல்லது காலதாமதமாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று அணையின் நீர்மட்டம் 118 அடியை தாண்டி நிரம்பும் தருவாயில் உள்ளது. எனவே இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் தொடர்ந்து 137 நாட்களுக்கு பாசனத்தின் தேவைக்கு ஏற்ப திறந்து விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்