மேட்டூர் அணை நீர்மட்டம் 104.76 அடியாக உயர்வு!

மேட்டூர் அணைக்கு நீர்மட்டம் சனிக்கிழமை காலை 104.76 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு சனிக்கிழமை காலை (அக்.26) முதல் வினாடிக்கு 7,500 கன அடியிலிருந்து வினாடிக்கு 2,500 கன அடியாக குறைக்கப்பட்டது.

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 102.92 அடியில் இருந்து 104.76 அடியாக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க |புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 31,575 கன அடியிலிருந்து வினாடிக்கு 33,148 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

அணையின் நீர் இருப்பு 71.148 டிஎம்சியாக உள்ளது.

Related posts

Video: Rachin Ravindra And Mitchell Santner’s Celebratory Moment Goes Viral As Latter Runs Out Rishabh Pant In Pune Test

Rasha Thadani Shares Priceless Photos With Mother Raveena Tandon On Her 50th Birthday

ICAI To Announce CA Intermediate And Foundation Results On October 30, 2024