மேற்கு வங்கத்தில் அடுத்த அதிர்ச்சி.. நர்ஸிடம் பாலியல் அத்துமீறல்

மேற்கு வங்கத்தில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்… நர்ஸிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நோயாளி!

கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சர்ச்சை ஓய்வதற்குள், மேற்கு வங்கத்தில் பிர்பூம் மாவட்ட அரசு மருத்துவமனையில் செவிலியர் ஒருவரிடம் நோயாளி ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.

மேற்கு வங்க மாநிலம் சோட்டோசக் என்ற கிராமத்தைச் சேர்ந்த அப்பாஸுதின் என்பவர் காய்ச்சல் காரணமாக பிர்பூம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, மருத்துவரின் அறிவுரைப்படி, நோயாளிக்கு செவிலியர் ஒருவர் குளுக்கோஸ் ஏற்ற முற்பட்டார். அப்போது, செவிலியரிடம் நோயாளி பாலியல் ரீதியில் அத்துமீறியதாகவும், அந்தரங்க பாகங்களில் தொட்டதாகவும் கூறப்படுகிறது.

விளம்பரம்

இதையும் படிக்க:
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை.. வெளியான அதிர்ச்சியளிக்கும் ஆடியோக்கள்!

உறவினர்கள் முன்னிலையில் நோயாளி அத்துமீறியபோது, செவிலியர் எச்சரித்தும், அந்த நபர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் அப்பாஸுதின் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இலாம் பசார் காவல்துறையினர் அப்பாஸுதினை விசாரணை செய்து வருகிறார்கள்.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
sexual harassment
,
West Bengal

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!