மேல்விஷாரம் நகர மன்ற தலைவர் மரணம்

மேல்விஷாரம் நகர திமுக செயலாளரும் நகர மன்ற தலைவருமான எஸ். டி. முகமது அமீன் (59) திடீா் மாரடைப்பு காரணமாக தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் நகர திமுக செயலாளரும் நகர மன்ற தலைவருமான எஸ். டி. முகமது அமீனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை 4 மணி அளவில் உயிரிழந்தார்.

இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.

Related posts

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

திருப்பதி லட்டு விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்