யானைகளுக்கு உகந்த வாழ்விடம் அளிக்க இந்தியா உறுதி: பிரதமா் மோடி

யானைகளுக்கு உகந்த வாழ்விடம் அளிக்க இந்தியா உறுதி: பிரதமா் மோடி உலக யானைகள் தினத்தையொட்டி யானைகளுக்கு உகந்த வாழ்விடத்தை உருவாக்குவதில் இந்தியா உறுதி பூண்டுள்ளது என பிரதமா் மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

உலக யானைகள் தினத்தையொட்டி யானைகளுக்கு உகந்த வாழ்விடத்தை உருவாக்குவதில் இந்தியா உறுதி பூண்டுள்ளது என பிரதமா் மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

உலக யானைகள் தினம் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி அனுசரிக்கப்படும் ஒரு சா்வதேச நிகழ்வாகும்.

இது தொடா்பாக பிரதமா் மோடி வெளிட்ட எக்ஸ் பதிவில், ‘யானைகளை பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் சமூக முயற்சிகளை பாராட்டும் இந்த தினத்தில், யானைகளுக்கு உகந்த வாழ்விடத்தை உருவாக்கும் மத்திய அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.

இந்தியாவை பொறுத்தவரை, யானைகள் நம் வரலாறு மற்றும் கலாசாரத்துடன் இணைக்கப்பட்ட ஒன்று. கடந்த சில ஆண்டுகளில், யானைகளின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று குறிப்பிட்டாா்.

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்