நடிகர் சூர்யாவை கேரளத்தில் தன் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான், ஊட்டியில் நடைபெற்றது.
தற்போது, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொச்சியில் துவங்கியுள்ளது.
அனிருத்தின் அதிரடி இசை… வெளியானது மனசிலாயோ!
இந்த நிலையில், கொச்சி சென்ற நடிகர் சூர்யாவை அவரின் ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க போட்டிபோட்டனர்.
பின், ரசிகர் ஒருவரின் செல்போனில் சூர்யா அவர்களுடனிருக்கும் புகைப்படத்தை எடுத்தார். இது, வைரலாகியுள்ளது. சூர்யாவுக்கு கேரளத்தில் ரசிகர்கள் பட்டாளம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவே தெரிகிறது.