மும்பையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள ரத்தன் டாடாவின் உடலுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படிக்க: ஆரூயிர் நண்பரை இழந்துவிட்டேன்: நாராயண மூர்த்தி!
ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி லாவோஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். இதன் காரணமாக மத்திய அரசின் சார்பில் ரத்தன் டாடாவின் உடலுக்கு அமித் ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படிக்க: அதிவேகமாக முச்சதமடித்த ஹாரி புரூக்..! இங்கிலாந்து 800 ரன்கள் குவிப்பு!
டாடா குழுமத்தை உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனமாக மாற்றிய பெருமைக்குரிய ரத்தன் டாடா, தனது 86வது வயதில் மும்பையில் உள்ள ப்ரீச்கேண்டி மருத்துவமனையில் புதன்கிழமை இரவு காலமானார்.
ரத்தன் டாடாவின் இறுதி ஊரவலம் இன்று பிற்பகல் 4 மணிக்கு தொடங்குகிறது.