ரஷியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்

பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மாஸ்கோ,

ஏர் இந்தியா விமானம் ரஷியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில், பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் இருந்து சான்பிரான்சிஸ்கோ செல்லும் ஏர் இந்தியா விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரஷியாவில் உள்ள க்ராஸ்னோயர்ஸ்க் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டு பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில், விமானப் பயணிகளுக்கு உதவுவதற்காக, அதிகாரிகள் மற்றும் மொழிபெயர்பாளர்கள் கொண்ட தூதரக குழு, க்ராஸ்னோயர்ஸ்க்-கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்தியாவில் உள்ள ரஷிய தூதரகம் தெரிவித்துள்ளது.

Related posts

முக்கிய வழக்குகளை மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை: இலங்கை புதிய அரசு உத்தரவு

லெபனானை முழு பலத்துடன் ஆதரிப்போம் – ஈரான்

ஈராக்கில் இருந்து இஸ்ரேல் மீது டிரோன் தாக்குதல்