ரஷியாவில் ஜெட் விமானம் தீப்பிடித்ததில் 3 பேர் பலி!

ரஷியாவில் ஜெட் விமானம் தீப்பிடித்ததில் 3 பேர் பலி!விமானத்தில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. ஜெட் விமானம் Center-Center-Chennai

மாஸ்கோவில் ரஷிய பயணிகள் சென்ற ஜெட் விமானம் தீப்பிடித்து எரிந்ததில் மூவர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக மாஸ்கோவில் உள்ள அதிகாரிகள் கூறுகையில், மாஸ்கோவின் கொலோமென்ஸ்கியில் சூப்பர்ஜெட் 100 ரகத்தைச் சேர்ந்த விமானம், நேற்று ரஷிய தலைநகருக்குத் தென்கிழக்கே லுகோவிட்சியில் உள்ள விமானம் தயாரிக்கும் ஆலையிலிருந்து பயணிகள் இல்லாமல் நேற்று ஊழியர்களின் பயிற்சிக்காகப் புறப்பட்டது.

மாஸ்கோவின் வினுகோவா விமான நிலையத்தை நோக்கிச் சென்றபோது விமானத்தில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக விமானம் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக நாட்டின் உயர்மட்ட மாநில குற்றப் புலனாய்வு அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Related posts

அ.தி.மு.க. திருத்தப்பட்ட விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் மனு

அரியானாவின் ‘பத்தாண்டுகால வலிக்கு’ காங்கிரஸ் முடிவுகட்டும் – ராகுல் காந்தி

உ.பி.யில் ஏழரை ஆண்டுகளாக எந்த வன்முறையும் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு