ரஷியா, ஆஸ்திரியா சுற்றுப்பயணம் நிறைவு: நாடு திரும்பினார் பிரதமர் மோடி

புதுடெல்லி,

இந்திய பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி ரஷியா சென்றார். அங்கு அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்தார். பின்னர் இருநாட்டு தலைவர்களும் 22வது இந்தியா – ரஷியா உச்சி மாநாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் இருநாட்டு உறவு, வர்த்தகம், ராணுவம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தனர். பின்னர், உக்ரைன் போர் குறித்தும் விவாதித்தனர்.

ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று ஆஸ்திரியா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மரை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆஸ்திரியாவாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்நிலையில், ரஷியா, ஆஸ்திரியா பயணத்தை முடித்த பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று காலை தலைநகர் டெல்லி வந்தடைந்தார். அதன்பின்னர் அங்கிருந்து பிரதமர் மாளிகைக்கு திரும்பினார்.

Related posts

பெங்களூருவில் பயங்கரம்: முக்கியக் குற்றவாளியைக் கண்டறிந்த காவல்துறை!

நிமிர்ந்தால் ஆயிரம் கலையழகு… மீஷா ஐயர்!

காதல்ஜோடியிடம் பணம் பறிப்பு! காவலர் இடைநீக்கம்!