ராகுல் டிராவிட்டுக்கும், கௌதம் கம்பீருக்கும் என்ன வித்தியாசம்? ரவிச்சந்திரன் அஸ்வின் பேச்சு!

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும், முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் வித்தியாசம் என்ன என்பது குறித்து இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரில் பொறுப்பேற்றுக் கொண்டார். அண்மையில் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து அவர் ஓய்வு பெற்றார்.

பேட்டிங், பந்துவீச்சை மேம்படுத்திக்கொள்ள முடியும்; இலங்கை கேப்டன் நம்பிக்கை!

கம்பீருக்கும், டிராவிட்டுக்கும் வித்தியாசம் என்ன?

இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான ராகுல் டிராட்டை விட, தற்போது அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீர் மிகவும் ரிலாக்ஸாக இருப்பார் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவருடைய யூடியூப் சேனலில் அவர் பேசியதாவது: கௌதம் கம்பீர் மிகவும் ரிலாக்ஸாக இருப்பதாக நினைக்கிறேன். அவரை நான் ரிலாக்ஸ்டு ராஞ்சோ என அழைக்க விரும்புகிறேன். அவர் எந்த விதமான அழுத்தத்திலும் இல்லை. காலையில் அணியின் பயிற்சி இருக்கும். பயிற்சி குறித்து அவர் பெரிதாக அழுத்தம் எடுத்துக் கொள்ளாமல், ரிலாக்ஸாக இருப்பார். நீங்கள் பயிற்சிக்கு வருகிறீர்களா? வாருங்கள் எனக் கூறுவார்.

ஷுப்மன் கில்லுடன் பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைய காரணம் என்ன? ரிஷப் பந்த் பதில்!

பயிற்சிக்கு நாங்கள் வந்தவுடன் ராகுல் டிராவிட்டிடம் கட்டளைகள் இருக்கும். தண்ணீர் பாட்டில் கூட அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் சரியாக, சரியான நேரத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அவர் மிகவும் சரியாக கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும் என நினைப்பார். கௌதம் கம்பீர் எல்லா விஷயங்களிலும் கடுமையாக இருக்கமாட்டார். அவரது கட்டளைகள் கூட ரிலாக்ஸானதாக இருக்கும். அவர் அனைவரது இதயங்களையும் வெல்பவர். இந்திய வீரர்கள் அவரை மிகவும் விரும்புவார்கள் என நினைக்கிறேன் என்றார்.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!