ராஜஸ்தான்: கைக்குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

ராஜஸ்தான்: கைக்குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலைஅஜ்மீர் மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது நான்கு மாதக் குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது நான்கு மாதக் குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் மதார் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் பிரியங்கா சௌராசியா (24), அவரது மகன் ஹரியான்ஷ் இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஷியாம் சிங் கூறுகையில், “அவர்களது உடலைக் கைப்பற்றி நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிரியங்காவை ஸ்கூட்டர் ஓட்டவிடாமல் அவரது கணவர், தாயார் தடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த, அவர் தனது மகனுடன் வீட்டை விட்டு வெளியேறி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

Related posts

மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பாவம் செய்துவிட்டார் சந்திரபாபு நாயுடு.. கோவில்களில் பரிகார பூஜை: ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு

பெண் தபேதாரின் பணியிட மாற்றத்துக்கு காரணம் மேயரின் அகங்காரமா? – தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி