ரீல்ஸ் விடியோ எடுக்கச் சென்ற பெண்! பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது!

சமூக வலைதளத்தில் பதிவிடுவதற்காக ரீல்ஸ் விடியோ எடுக்கச் சென்ற பெண்ணை இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடியோ எடுப்பதற்காக புறநகருக்குச் சென்றபோது, இச்சம்பவம் நடந்ததாக காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், 22 வயது இளம்பெண் ஒருவர், சமூக வலைதளத்தில் பதிவிட விடியோ எடுப்பதற்காக தனது நண்பருடன் புறநகருக்குச் செவ்வாய்க்கிழமை இரவு (செப். 3) சென்றுள்ளார். அங்கு இரு இளைஞர்கள் அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் இருவரையும் மல்ஹர்கஞ்ச் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் பெண்ணின் ஆண் நண்பருக்குத் தெரிந்தவர் எனவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

பெண்ணை நிர்வாணமாக நடனமாட வைத்து பாலியல் வன்கொடுமை!

சமூக வலைதளத்தில் பதிவிடுவதற்காக விடியோ (ரீல்ஸ்) எடுக்கச் சென்ற ஆண் நண்பருக்கு இச்சம்பவத்தில் தொடர்புள்ளதா என காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை