ரூ.2 லட்சத்துக்கு போலீஸ் வேலை: ஐபிஎஸ் சீருடையில் சுற்றிய சிறுவன் கைது!

ரூ.2 லட்சம் கொடுத்தால் போலீஸ் வேலை வாங்கித் தருவதாகக் கூறிய நபரிடம், சமோசா விற்றப் பணத்தைக் கொடுத்து ஏமாந்த சிறுவன், ஐபிஎஸ் சீருடையில் கையில் துப்பாக்கியுடன் சுற்றியதால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சமோசா போன்ற தின்பண்டங்களை விற்பனை செய்து வந்த சிறுவன், தான் விரைவில் ஐபிஎஸ் அதிகாரி ஆகப்போகிறேன் என்று சொல்லி வந்ததில் யாரும் ஆச்சரியப்படவில்லை. ஏதே விளையாட்டாக சொல்கிறார் என்றுதான் நினைத்திருப்பார்கள்.

ஆனால், பிகார் மாநிலம் ஜமூய் மாவட்டத்தில், உள்ள சிறிய கிராமத்தில், 18 வயதே அந்த அந்த சிறுவன், ஐபிஎஸ் அதிகாரியின் உடையில், கையில் துப்பாக்கியுடன் ரோந்து வந்தபோது பலரும் மிரண்டேவிட்டிருப்பார்கள். சிலர் விவரம் அறிந்து உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

காவல்துறையினர் அவரைக் கைது செய்த போதுகூட, சிறுவனுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை.

A Police Sub-inspector arrested fake IPS officer in Jamui (The 18-year-old youth was going around wearing uniform and trying to act as an IPS when he was detained) Bihar
pic.twitter.com/1C4vWwLDIE

— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 20, 2024

அவரிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, இந்த மோசடியில் தொடர்புடைய அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மனோஜ் சிங் என்பவர், தன்னிடம் 2 லட்சம் கொடுத்தால் போலீஸ் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதை நம்பி, மிதிலேஷ், சமோசா விற்று சம்பாதித்தப் பணத்தை அவரிடம் சிறுக சிறுக கொடுத்துள்ளார். இந்த நிலையில்தான், தனக்கு மனோஜ் சிங் சீருடையும் துப்பாக்கியும் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.இன்னமும் 30 ஆயிரம் பாக்கி இருப்பதாகவும், அதனைக் கொடுப்பதற்குள் காவல்துறையினர் கைது செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

போலி ஐபிஎஸ் அதிகாரி, காவல்நிலையத்துக்குள் அழைத்து வரும் விடியோ வைரலாகியிருக்கிறது.

Related posts

ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி!

அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி!

ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து