‘ரேணுகாசாமியின் மனைவிக்கும் கருவில் உள்ள குழந்தைக்கும் நீதி வேண்டும்’ – ‘நான் ஈ’ பட நடிகர்

படுகொலை செய்யப்பட்ட ரேணுகாசாமியின் மனைவிக்கும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று நடிகர் கிச்சா சுதீப் கூறியுள்ளார்.

சென்னை,

கன்னட திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நடிகர் கிச்சா சுதீப். பிரபல நடிகரான இவருக்கு, அதிரடியான மற்றும் தனித்தன்மையான நடிப்பு ஆகியவற்றுக்காகவே ரசிகர்கள் வட்டாரம் அதிகம் உள்ளது. இவர் நடித்த நான் ஈ திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக்கொடுத்தது.

இந்நிலையில், நடிகர் தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளால் படுகொலை செய்யப்பட்ட ரேணுகாசாமியின் மனைவிக்கும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று நடிகர் கிச்சா சுதீப் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, 'அந்த குடும்பத்துக்கு நீதி வேண்டும். ரேணுகாசாமியின் மனைவிக்கு நீதி வேண்டும். கருவிலிருக்கும் குழந்தைக்கு நீதி வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நீதியின் மீது அனைவருக்கும் நம்பிக்கை இருக்க வேண்டும், இந்த வழக்கில் நீதி வெல்ல வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!