லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அடுத்த இலக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என ஒடிசா நடிகர் புத்ததித்யா மொகந்தி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், 'ஜெர்மனியிடம் கெஸ்டபோ(சிறப்பு காவல் படை) இருந்தது. இஸ்ரேலிடம் மொசாட்(புலனாய்வு அமைப்பு) உள்ளது. அமெரிக்காவில் சிஐஏ உள்ளது. இப்போது இந்தியாவில் லாரன்ஸ் பிஷ்னோய். அவர்க்ளின் பட்டியலில் அடுத்ததாக இருப்பது ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைஸி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய மாணவர்கள் சங்கத் தலைவர் உதித் பிரதான், காவல்துறையில் ஒடிசா நடிகர் புத்ததித்யா மீது புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து நடிகர் புத்ததித்யா தனது பதிவை நீக்கியத்துடன் மன்னிப்பும் கோரியுள்ளார்.
இதையும் படிக்க | ரேஷன் கார்டில் பெயர் நீக்கமா? இனி இதுதான் நடைமுறை!
லாரன்ஸ் பிஷ்னோய்
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பாபா சித்திக் கொலைக்கு முழு பொறுப்பேற்பதாக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் அறிவித்தது.
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இதுபோன்று பல குற்றங்களில் ஈடுபட்டு வழக்குகள் உள்ளன.
தற்போது, தாங்கள் வணங்கும் குறிப்பிட்ட இன மான்களை வேட்டையாடியதற்காக, சல்மான் கானை கொலை செய்ய லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் முயற்சி செய்து வருகின்றனர்.
லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது பஞ்சாப் சபர்மதி மத்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.