லாரி சக்கரத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே இருசக்கர வாகனத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சென்றுக்கொண்டிருந்த நிலையில், டேங்கர் லாரியை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக லாரியின் சக்கரத்தில் சிக்கியதால் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

சாலை விபத்தில் 2 குழந்தைகள் மற்றும் 2 பெரியவர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

மல்லிப்பட்டினம் அருகே கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் ராஜா புதுக்குடியை சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இருசக்கர வாகனத்தில் நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலையில், வண்ணாரப்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளனர்.

இந்த நிலையில், லாரி இருசக்கர வானத்தின் பின்புறத்தில் மோதியதால் 4 பேரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி பலியாகினர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்