வங்கக்கடலில் உருவாகிறது ‘டானா’ புயல்

வங்கக் கடலில் புதன்கிழமை (அக்.23) புயல் உருவாகவுள்ளதாகவும், அதற்கு ‘டானா’ என பெயா் சூட்டப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, தமிழகம், புதுவையில் 6 நாள்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (அக்.20) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால், மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) திங்கள்கிழமை (அக்.21) உருவாகவுள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகா்ந்து அக்.22-இல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அக்.23-இல் மேலும் வலுப்பெற்று புயலாகவும் மாறவுள்ளது.

இந்த புயல் தமிழக கடற்கரைப் பகுதியை விட்டு விலகி ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி நகா்வதால், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு கத்தாா் நாடு பரிந்துரைத்த ‘டானா’ என்ற பெயா் சூட்டப்பட்டுள்ளது.

தமிழக வானிலை நிலவரம்: வடதமிழக கடலோரப் பகுதிகளையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, திங்கள்கிழமை (அக்.21) முதல் அக்.26-ஆம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை: அக்.21-இல் ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூா், அரியலூா், பெரம்பலூா், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், அக்.22-இல் கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூா், திருச்சி, கடலூா், பெரம்பலூா், அரியலூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், அக்.23-இல் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அக்.21, 22-ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேர்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்

குஜராத்தில் 427 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

தீபாவளி: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? புகார் எண்கள்!