வசூல் சாதனை செய்வாரா விஜய்?

விஜய்யின் கோட் திரைப்படம் மிகப்பெரிய வசூலைப் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் வருகிற செப். 5 ஆம் தேதி உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. படத்தின் புரமோஷன் நேர்காணல்களால் விஜய் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களான கேரளம் மற்றும் ஆந்திரத்திலும் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

கோட் படத்தில் பல ஆச்சரியங்கள் இருக்கின்றன: பிரேம்ஜி

முக்கியமாக, கேரளத்தில் இதுவரை டிக்கெட் முன்பதிவு வாயிலாகவே இப்படம் ரூ. 1.75 கோடியை ஈட்டியுள்ளது. மேலும், கேரளத்தில் மட்டும் முதல்நாளில் 700 திரைகளில் 4000 காட்சிகளுடன் கோட் வெளியாகிறது.

தமிழகத்தில் 1100 திரைகளிலும் வடமாநிலங்களில் 1000 திரைகளிலும் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் என கிட்டத்தட்ட 5000 திரைகளில் கோட் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதால் கோட் முதல் நாளில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என்றே தெரிகிறது.

மேலும், முன்பதிவுகளிலும் பெரிய சாதனையைப் புரியவுள்ளது. காரணம், விஜய் முழுநேர அரசியலுக்குள் வந்தபின் சினிமாவில் நடிக்க மாட்டேன் எனக் கூறியிருக்கிறார். இதனால், விஜய்யின் பெரிய கமர்சியல் திரைப்படம் இதுதான் என்பதால் எப்படியாவது முதல்நாளிலேயே கோட் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

நோ கமண்ட்ஸ்! ஹேமா கமிட்டி அறிக்கையைப் பேச மறுத்த ஆண்ட்ரியா!

தென்னிந்தியளவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பல காட்சிகள் திரையிடப்பட உள்ளன. விஜய்யின் அதிகம் வசூலித்த திரைப்பட வரிசையில் முதலிடத்தில் லியோ (ரூ. 620 கோடி) இருக்கிறது. கோட் வெளியாகும் திரைகளின் எண்ணிக்கையையும், காட்சிகளையும் கணக்கிடும்போது லியோவின் வசூலை முறியடிக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!